இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், இலங்கையர்களுக்கான புதிய, திறமையான மற்றும் பாதுகாப்பான இணையவழி கடவுச்சீட்டு (E-Passport) திட்டத்தை 2025 ஜனவரி முதலாம் திகதி முதல் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த முயற்சியானது விண்ணப்ப செயல்முறையை எளிதாக்குவது மற்றும் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு மென்மையான அனுபவத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

2024 ஜூலை 16ஆம் திகதி முதல், அனைத்து கடவுசீட்டு விண்ணப்பங்களுக்கும் அதிகாரப்பூர்வ இணையதளம் ஊடாக முன் பதிவு செய்யபட வேண்டும். ஜூலை 16 அன்று பதிவுசெய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட திகதி மற்றும் நேரத்தின் அடிப்படையில் ஜூலை 19ஆம் திகதி முதல் முன்னுரிமை வழங்கப்படும். தற்போதைய விண்ணப்ப முறை ஜூலை 18, 2024 வரை மட்டுமே செல்லுபடியாகும். முன்னதாக ஒதுக்கப்பட்ட திகதி மற்றும் நேரம் இல்லாத விண்ணப்பங்கள் செல்லுபடியற்றதாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து உரையாடலில் இணையுங்கள்! கீழே கருத்துக்களை பகிர்வதன் மூலம் Positive Sri Lanka உடன் இணைந்து உடனடி தகவல்களை தெரிந்து கொண்டு எம்மோடு ஒன்றிணைந்திருங்கள்.

எங்கள் தளத்தில் சிறந்த இணைய அனுபவத்தை வழங்க, Positive Sri Lanka குக்கீகளைப் பயன்படுத்துகிறது. நீங்கள் பயணத்தைத் தொடர்ந்ததும் குக்கீகள் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று கருதப்படும். நாங்கள் பயன்படுத்தும் குக்கீ கொள்கையைப் பற்றி மேலும் அறிக இங்கே